அறத்திறங்க ளுக்குநீ யகண்டமெண் டிசைக்கும்நீ
திறத்திறங்க ளுக்குநீ தேடுவார்கள் சிந்தைநீ
உறக்கம்நீ யுணர்வுநீ யுட்கலந்த ஜோதிநீ
மறக்கொணாத நின்கழல் மறப்பினுங் குடிகொளே. 61
அண்டம்நீ யகண்டம்நீ யால்மூல மானநீ
கண்டம்நீ கருத்துநீ காவியங்க ளானநீ
புண்டரீக மற்றுளே புணருகின்ற புண்ணியர்
கொண்டகோல மானநேர்மை கூர்மையென்ன கூர்மையே. 62
மையடர்ந்த கண்ணினால் மயங்கிடும் மயக்கிலே
ஐயிறந்து கொண்டுநீங்க ளல்லலற் றிருப்பீர்காள்
மெய்யடர்ந்த சிந்தையால் விளங்குஞான மெய்தினால்
உய்யடர்ந்து கொண்டுநீங்க ளூழிகாலம் வாழ்வீரே. 63
கருவிருந்த வாசலாற் கலங்குகின்ற வூமைகாள்
குருவிருந்து சொன்னவார்த்தை குறித்துநோக்க வல்லிரேல்
உருவிலங்கு மேனியாகி யும்பராகி நின்றுநீர்
திருவிலங்கு மேனியாகிச் சென்றுகூட லாகுமே. 64
தீர்த்தமாட வேணுமென்று தேடுகின்ற தீனர்காள்
தீர்த்தமாட லெவ்விடந் தெரிந்துநீ ரியம்புவீர்
தீர்த்தமாட யெவ்விடந் தெரிந்துநீ ரறிந்தபின்
தீர்த்தமாக வுள்ளதுஞ் சிவாயவஞ் செழுத்துமே. 65
கழுத்தையும் நிமிர்த்திநல்ல கண்ணையும் விழித்துநீர்
பழுத்தவாய் விழுந்துபோன பாவமென்ன பாவமே
அழுத்தமான வித்திலே யனாதியா யிருப்பதோர்
எழுத்திலா வெழுத்திலே யிருக்கலா மிருந்துமே. 66
கண்டுநின்ற மாயையுங் கலந்துநின்ற பூதமும்
உண்டுறங்கு மாறுநீ ருணர்ந்திருக்க வல்லிரேல்
பண்டையாறு மொன்றுமாய் பயந்தவேத சுத்தனாய்
அண்டமுத்தி யாகிநின்ற வாதிமூல மூலமே. 67
ஈன்றவாச லுக்கிரங்கி யெண்ணிறந்து போவீர்காள்
கான்றவாழை மொட்டலர்ந்த காரண மறிகிலீர்
நான்றவாச லைத்திறந்து நாடிநோக்க வல்லிரேல்
தோன்றுமாயை விட்டொழிந்துசோ திவந்து தோன்றுமே. 68
உழலும்வாச லுக்கிரங்கி யூசலாடு மூமைகாள்
உழலும்வாச லைத்திறந்து வுண்மைசேர வெண்ணுவீர்
உழலும்வாச லைத்திறந்து வுண்மைநீ ருணர்ந்தபின்
உழலும்வாச லுள்ளிருந்த வுண்மைதானு மாவீரே. 69
மூலநாடி தன்னிலே முளைத்தெழுந்த சோதியை
நாலுநாழி யும்முளே நாடியே யிருந்தபின்
பாலனாகி வாழலாம் பறந்துபோக யாக்கையும்
ஆலமுண்ட கண்டராணை யம்மையாணை யுண்மையே. 70
திறத்திறங்க ளுக்குநீ தேடுவார்கள் சிந்தைநீ
உறக்கம்நீ யுணர்வுநீ யுட்கலந்த ஜோதிநீ
மறக்கொணாத நின்கழல் மறப்பினுங் குடிகொளே. 61
அண்டம்நீ யகண்டம்நீ யால்மூல மானநீ
கண்டம்நீ கருத்துநீ காவியங்க ளானநீ
புண்டரீக மற்றுளே புணருகின்ற புண்ணியர்
கொண்டகோல மானநேர்மை கூர்மையென்ன கூர்மையே. 62
மையடர்ந்த கண்ணினால் மயங்கிடும் மயக்கிலே
ஐயிறந்து கொண்டுநீங்க ளல்லலற் றிருப்பீர்காள்
மெய்யடர்ந்த சிந்தையால் விளங்குஞான மெய்தினால்
உய்யடர்ந்து கொண்டுநீங்க ளூழிகாலம் வாழ்வீரே. 63
கருவிருந்த வாசலாற் கலங்குகின்ற வூமைகாள்
குருவிருந்து சொன்னவார்த்தை குறித்துநோக்க வல்லிரேல்
உருவிலங்கு மேனியாகி யும்பராகி நின்றுநீர்
திருவிலங்கு மேனியாகிச் சென்றுகூட லாகுமே. 64
தீர்த்தமாட வேணுமென்று தேடுகின்ற தீனர்காள்
தீர்த்தமாட லெவ்விடந் தெரிந்துநீ ரியம்புவீர்
தீர்த்தமாட யெவ்விடந் தெரிந்துநீ ரறிந்தபின்
தீர்த்தமாக வுள்ளதுஞ் சிவாயவஞ் செழுத்துமே. 65
கழுத்தையும் நிமிர்த்திநல்ல கண்ணையும் விழித்துநீர்
பழுத்தவாய் விழுந்துபோன பாவமென்ன பாவமே
அழுத்தமான வித்திலே யனாதியா யிருப்பதோர்
எழுத்திலா வெழுத்திலே யிருக்கலா மிருந்துமே. 66
கண்டுநின்ற மாயையுங் கலந்துநின்ற பூதமும்
உண்டுறங்கு மாறுநீ ருணர்ந்திருக்க வல்லிரேல்
பண்டையாறு மொன்றுமாய் பயந்தவேத சுத்தனாய்
அண்டமுத்தி யாகிநின்ற வாதிமூல மூலமே. 67
ஈன்றவாச லுக்கிரங்கி யெண்ணிறந்து போவீர்காள்
கான்றவாழை மொட்டலர்ந்த காரண மறிகிலீர்
நான்றவாச லைத்திறந்து நாடிநோக்க வல்லிரேல்
தோன்றுமாயை விட்டொழிந்துசோ திவந்து தோன்றுமே. 68
உழலும்வாச லுக்கிரங்கி யூசலாடு மூமைகாள்
உழலும்வாச லைத்திறந்து வுண்மைசேர வெண்ணுவீர்
உழலும்வாச லைத்திறந்து வுண்மைநீ ருணர்ந்தபின்
உழலும்வாச லுள்ளிருந்த வுண்மைதானு மாவீரே. 69
மூலநாடி தன்னிலே முளைத்தெழுந்த சோதியை
நாலுநாழி யும்முளே நாடியே யிருந்தபின்
பாலனாகி வாழலாம் பறந்துபோக யாக்கையும்
ஆலமுண்ட கண்டராணை யம்மையாணை யுண்மையே. 70