சிவயவசி

சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி
சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசிசிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி
சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசிசிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி
சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசிசிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி
சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி

வெள்ளி, ஜூன் 12, 2015

பட்டினத்தார் பாடல்கள் - 3

மூன்றாவது

கோயில் திருவகவல்

இணைக்குறள் ஆசிரியப்பா

பாற்கடல் கடையப் படுங்கடு வெண்ணெயைத்
திருமிடற் றடக்கிய சிவனே அடைக்கலம்
அடங்கலும் அடக்கிடுங் கடுங்கொலைக் காலனைக்
காலெடுத் தடக்கிய கடவுணின் அடைக்கலம்
உலகடங் கலும்படைத் துடையவன் தலைபறித் 5

திடக்கையி லடக்கிய இறைவனின் அடைக்கலம்
செய்யபொன் னம்பலச் செல்வனின் அடைக்கலம்
ஐயநின் னடைக்கலம் அடியனின் அடைக்கலம்
மனவழி யலைத்திடுங் கனவெனும் வாழ்க்கையும்
விழுப்பொரு ளறியா அழுக்குறு மனனும் 10

ஆணவ மலத்துதித் தளைந்ததில் உளைந்திடும்
நிணவைப் புழுவென தெளிந்திடு சிந்தையும்
படிறும் பாவமும் பழிப்புறு நினைப்பும்
தவறும் அழுக்காறும் இவறுபொச் சாப்பும்
கவடும் பொய்யுஞ் சுவடும் பெருஞ்சின 15

இகலுங் கொலையும் இழிப்புறு புன்மையும்
பகையும் அச்சமும் துணிவும் பனிப்பும்
முக்குண மடமையு மைம்பொறி முயக்கமும்
இடும்பையும் பிணியும் இடுக்கிய ஆக்கையை
உயிரெனும் குருவிவிட் டோடுங் குரம்பையை 20

எலும்பொடு நரம்புகொண் டிடையிற் பிணித்துக்
கொழுந்தசை மேய்ந்து மெழுக்குவிழுங் குடிலைச்
செழும்பெழு வுதிரச் சிறுபுழுக் குரம்பையை
மலவுடற் குடத்தை புலவுடற் புட்டிலைத்
தொலைவிலாச் சோற்றுத் துன்பக் குழியைக் 25

கொலைப்படைக் கலம்பல கிடக்குங் கூட்டைச்
சலிப்புறு வினைப்பல சரக்குக் குப்பையைக்
கோட்சரக் கொழுகும் பீற்றற் கோணியைக்
கோபத்தீ மூட்டுங் கொல்லன் துருத்தியை
ஐம்புலப் பறவை யடையும்பஞ் சரத்தைப் 30

புலராக் கவலை வினைமரப் பொதும்பை
ஆசைக் கயிற்று லாடுபம் பரத்தைக்
காசிற் பணத்திற் சுழலுங்காற் றாடியை
மக்கள் வினையின் மயக்குந் திகிரியைக்
கடுவெளி யுருட்டிய சகடக் காலைப் 35

பாவச் சரக்கொடு பவக்கடல் புக்குக்
காமக் காற்றெடுத் தலைப்பக்
கெடுவழிக் கரைசேர் கொடுமரக் கலத்தை
இருவினை விலங்கொடும் இயங்குபுற் கலனை
நடுவன்வந் தழைத்திட நடுங்கிடும் யாக்கையைப் 40

பிணமெனப் படுத்தியான் புறப்படும் பொழுதுநின்
அடிமலர்க் கமலத்துக் கபயநின் னடக்கலம்
வெளியிடை யுருமிடி யிடித்தென வெறித்தெழுங்
கடுநடை வெள்விடைக் கடவுணின் னடைக்கலம்
இமையா நாட்டத் திறையே அடைக்கலம் 45

அடியார்க் கெளியாய் அடைக்கல மடைக்கலம்
மறையவர் தில்லை மன்றுணின் றாடிக்
கருணைமொண் டலையெறி கடலே அடைக்கலம்
தேவரு முனிவருஞ் சென்றுநின் றேந்தப்
பாசிழைக் கொடியொடு பரிந்தருள் புரியும் 50

எம்பெரு மானின் னிணையடிக் கபயம்
அம்பலத் தரசே அடக்கல முனக்கே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக