சிவயவசி

சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி
சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசிசிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி
சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசிசிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி
சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசிசிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி
சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி

திங்கள், ஜூன் 15, 2015

சிவவாக்கியர் பாடல்கள் - 5

வாயிலே குடித்தநீரை யெச்சிலென்று சொல்கிறீர்
வாயிலே குதப்புவேத மெனப்படக் கடவதோ
வாயிலெச்சில் போகவென்று நீர்தனைக் குடிப்பீர்காள்
வாயிலெச்சில் போனவண்ணம் வந்திருந்து சொல்லுமே. 41

ஓதுகின்ற வேதமெச்சி லுள்ளமந் திரங்களெச்சில்
மோதகங்க ளானதெச்சில் பூதலங்க ளேழுமெச்சில்
மாதிருந்த விந்துவெச்சில் மதியுமெச்சி லொளியுமெச்சில்
ஏதிலெச்சி லில்லதில்லை யில்லையில்லை யில்லையே. 42

பிறப்பதற்கு முன்னெலா யிருக்குமாறு தெங்ஙனே
பிறந்துமண் ணிறந்துபோ யிருக்குமாறு தெங்ஙனே
குறித்துநீர் சொலாவிடிற் குறிப்பில்லாத மாந்தரே
அறுப்பனே செவியிரண்டு மஞ்செழுத்து வாளினால். 43

அம்பலத்தை யம்புகொண்ட சங்கென்றால் சங்குமோ
கம்பமற்ற பாற்கடல் கலங்கென்றால் கலங்குமோ
இன்பமற்ற யோகியை யிருளும்வந் தணுகுமோ
செம்பொ னம்பலத்துளே தெளிந்ததே சிவாயமே. 44

சித்தமேது சிந்தையேது சீவனேது சித்தரே
சத்தியேது சம்புவேது சாதிபேத மற்றெது
முத்தியேது மூலமேது மூலமந் திரங்களேது
வித்திலாத வித்திலே யிதின்னதென் றியம்புமே. 45

சித்தமற்று சிந்தையற்று சீவனற்று நின்றிடம்
சத்தியற்று சம்புவற்று சாதிபேத மற்றுநன்
முத்தியற்று மூலமற்று மூலமந் திரங்களும்
வித்தைவித்தை யீன்றவிதத்தில் விளைந்ததே சிவாயமே. 46

சாதியாவதேதடா சலந்திரண்ட நீரெலாம்
பூதவாச லொன்றலோ பூதமைந்து மொன்றலோ
காதில்வாளி காரைகம்பி பாடகம்பொ னென்றலோ
சாதிபேத மோதுகின்ற தன்மையென்ன தன்மையே. 47

கறந்தபால் முலைப்புகா கடைந்தவெண்ணெய் மோர்புகா
உடைந்துபோன சங்கினோசை யுயிர்களு முடற்புகா
விரிந்தபூ வுதிர்ந்தகாயு மீண்டுபோய் மரம்புகா
இறந்தவர் பிறப்பதில்லை யில்லையில்லை யில்லையே. 48

தரையினிற் கிடந்தபோ தன்றுதூமை யென்றிலீர்
துறையறிந்து நீர்குளித்த தன்றுதூமை யென்றிலீர்
பறையறிந்து நீர்பிறந்த தன்றுதூமை யென்றிலீர்
புரையிலாத வீசரோடு பொருந்துமாற தெங்ஙனே. 49

தூமைதூமை யென்றுளே துவண்டலையு மேழைகாள்
தூமையான பெண்ணிருக்க தூமைபோன தெவ்விடம்
ஆமைபோல் முழுகிவந் தனேகவேத மோதுறீர்
தூமையுந் திரண்டுருண்டு சொற்ருருக்க ளானதே. 50



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக