சொற்குருக்க ளானதும் சோதிமேனி யானதும்
மெய்க்குருக்க ளானதும் வேணபூசை செய்வதும்
சற்குருக்க ளானதும் சாத்திரங்கள் சொல்வதும்
மெய்க்குருக்க ளானதுந் திரண்டுருண்ட தூமையே. 51
கைவடங்கள் கொண்டுநீர் கண்சிமிட்டி நிற்கிறீர்
எவ்விடங்கள் கண்டுநீ ரெண்ணியெண்ணி பார்க்கிறீர்
பொய்யுணர்ந்த சிந்தையை பொருந்திநோக்க வல்லிரேல்
மெய்கடிந்த தும்முளே விரைந்துகூற லாகுமே. 52
ஆடுகாட்டி வேங்கையை யகப்படுத்து மாறுபோல்
மாடுகாட்டி யென்னைநீ மதிமயக்க லாகுமோ
கோடுகாட்டி யானையைக் கொன்றுரித்த கொற்றவா
வீடுகாட்டி யென்னைநீ வெளிப்படுத்த வேணுமே. 53
இடதுகண்கள் சந்திரன் வலதுகண்கள் சூரியன்
இடக்கைசங்கு சக்கரம் வலக்கைசூல மான்மழு
எடுத்தபாதம் நீண்முடி யெண்டிசைக்கு மப்புறம்
உடல்கடந்து நின்றமாயம் யாவர்காண வல்லரே. 54
நாழியப்பும் நாழியுப்பும் நாழியான வாறுபோல்
ஆழியோனு மீசனு மமர்ந்துவாழ்ந் திருந்திடம்
ஏறிலேறு மீசனு மியங்குசக்ர தரனையும்
வேறுகூறு பேசுவோர் வீழ்வர்வீ ணரகிலே. 55
தில்லைநா யகன்னவன் திருவரங் கனும்மவன்
எல்லையான புவனமு மேகமுத்தி யானவன்
பல்லுநாவு முள்ளபேர் பகுந்துகூறி மகிழுவார்
வல்லபங்கள் பேசுவார் வாய்புகுந்து மாய்வரே. 56
எத்திசைக்கு மெய்வுயிர்க்கு மெங்களப்ப னெம்பிரான்
முத்தியான வித்துளே முளைத்தெழுந் தவச்சுடர்
சித்தமுந் தெளிந்துவேத கோயிலுந் திறந்தபின்
அத்தனாடல் கண்டபின் னடங்கலாடல் காணுமே. 57
உற்றநூல்க ளும்முளே யுணர்ந்துணர்ந்து பாடுவீர்
பற்றறுத்து நின்றநீர் பராபரங்க ளெய்துவீர்
கொற்றமாவை யுள்ளரைச் செருக்கறுத் திருந்திடில்
சுற்றமாக வும்முளே சோதியென்றும் வாழுமே. 58
போதடா வெழுந்ததும் புனலதாகி வந்ததும்
தாதடா புகுந்ததும் தானடா விளைந்ததும்
ஓதடா வஞ்சுமூன்று மொன்றதான வக்கரம்
ஓதடா விராமராம ராமவென்னும் நாமமே. 59
அகாரமென்ற வக்கரத்தி லவ்வுவந் துதித்ததோ
உகாரமென்ற வக்கரத்தி லுவ்வுவந் துதித்ததோ
அகாரமும் உகாரமுஞ் சிகாரமின்றி நின்றதோ
விகாரமற்ற யோகிகாள் விரித்துரைக்க வேணுமே. 60
மெய்க்குருக்க ளானதும் வேணபூசை செய்வதும்
சற்குருக்க ளானதும் சாத்திரங்கள் சொல்வதும்
மெய்க்குருக்க ளானதுந் திரண்டுருண்ட தூமையே. 51
கைவடங்கள் கொண்டுநீர் கண்சிமிட்டி நிற்கிறீர்
எவ்விடங்கள் கண்டுநீ ரெண்ணியெண்ணி பார்க்கிறீர்
பொய்யுணர்ந்த சிந்தையை பொருந்திநோக்க வல்லிரேல்
மெய்கடிந்த தும்முளே விரைந்துகூற லாகுமே. 52
ஆடுகாட்டி வேங்கையை யகப்படுத்து மாறுபோல்
மாடுகாட்டி யென்னைநீ மதிமயக்க லாகுமோ
கோடுகாட்டி யானையைக் கொன்றுரித்த கொற்றவா
வீடுகாட்டி யென்னைநீ வெளிப்படுத்த வேணுமே. 53
இடதுகண்கள் சந்திரன் வலதுகண்கள் சூரியன்
இடக்கைசங்கு சக்கரம் வலக்கைசூல மான்மழு
எடுத்தபாதம் நீண்முடி யெண்டிசைக்கு மப்புறம்
உடல்கடந்து நின்றமாயம் யாவர்காண வல்லரே. 54
நாழியப்பும் நாழியுப்பும் நாழியான வாறுபோல்
ஆழியோனு மீசனு மமர்ந்துவாழ்ந் திருந்திடம்
ஏறிலேறு மீசனு மியங்குசக்ர தரனையும்
வேறுகூறு பேசுவோர் வீழ்வர்வீ ணரகிலே. 55
தில்லைநா யகன்னவன் திருவரங் கனும்மவன்
எல்லையான புவனமு மேகமுத்தி யானவன்
பல்லுநாவு முள்ளபேர் பகுந்துகூறி மகிழுவார்
வல்லபங்கள் பேசுவார் வாய்புகுந்து மாய்வரே. 56
எத்திசைக்கு மெய்வுயிர்க்கு மெங்களப்ப னெம்பிரான்
முத்தியான வித்துளே முளைத்தெழுந் தவச்சுடர்
சித்தமுந் தெளிந்துவேத கோயிலுந் திறந்தபின்
அத்தனாடல் கண்டபின் னடங்கலாடல் காணுமே. 57
உற்றநூல்க ளும்முளே யுணர்ந்துணர்ந்து பாடுவீர்
பற்றறுத்து நின்றநீர் பராபரங்க ளெய்துவீர்
கொற்றமாவை யுள்ளரைச் செருக்கறுத் திருந்திடில்
சுற்றமாக வும்முளே சோதியென்றும் வாழுமே. 58
போதடா வெழுந்ததும் புனலதாகி வந்ததும்
தாதடா புகுந்ததும் தானடா விளைந்ததும்
ஓதடா வஞ்சுமூன்று மொன்றதான வக்கரம்
ஓதடா விராமராம ராமவென்னும் நாமமே. 59
அகாரமென்ற வக்கரத்தி லவ்வுவந் துதித்ததோ
உகாரமென்ற வக்கரத்தி லுவ்வுவந் துதித்ததோ
அகாரமும் உகாரமுஞ் சிகாரமின்றி நின்றதோ
விகாரமற்ற யோகிகாள் விரித்துரைக்க வேணுமே. 60
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக