அரியதோர் நமச்சிவாய மாதியந்த மானதும்
ஆறிரண்டு நூறுதேவ ரன்றுரைத்த மந்திரம்
சுரியதோ ரெழுத்தையுன்னி சொல்லுவேன் சிவவாக்கியம்
தோஷதோஷ பாவமாய்கை தூரதூர வோடவோ. 1
கரியதோர் முகத்தையொத்த கற்பகத்தைக் கைதொழக்
கலைகள் நூல்கள் ஞானமுங் கருத்தில்வந்து திக்கவே
பெரியபேர்கள் சிறியபேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம்
பேயனாகி யோதிடும் பிழைபொறுக்க வேண்டுமே. 2
ஆனவஞ் செழுத்துளே யண்டமு மகண்டமு
ஆனவஞ் செழுத்துளே யாதியான மூவரும்
ஆனவஞ் செழுத்துளே யகாரமு மகாரமும்
ஆனவஞ் செழுத்துளே யடங்கலாவ லுற்றதே. 3
ஓடியோடி யோடியோடி யுட்கலந்த சோதியை
நாடிநாடி நாடிநாடி நாட்களுங் கழிந்துபோய்
வாடிவாடி வாடிவாடி மாண்டுபோன மாந்தர்காள்
கோடிகோடி கோடிகோடி எண்ணிறந்த கோடியே. 4
உருத்தரித்த நாடியி லொடுங்குகின்ற வாயுவை
கருத்தினா லிருத்தியே கபாலமேற்ற வல்லிரே
விருத்தரும் பாலராவர் மேனியுஞ் சிவந்திடும்
அருட்டரித்த நாதர்பாத மம்மைபாக முண்மையே. 5
வடிவுகண்டு கொண்டபெண்ணை மற்றொரு வனத்தினால்
விடுவனோவவனை யின்னம் வெட்டவேணு மென்பனே
நடுவன்வந் தழைத்தபோது நாறுமிந்த நல்லுடல்
சுடலைமட்டுங் கொண்டுபோய்த் தோட்டிகைக் கொடுப்பரே 6
என்னிலே யிருந்ததொன்றை யானறிந்த தில்லையே
என்னிலே யிருந்ததொன்றை யானறிந்து கொண்டபின்
என்னிலே யிருந்ததொன்றை யாவர்காண வல்லிரோ
என்னிலே யிருந்துணர்ந்து யானணுர்ந்து கொண்டனே. 7
நினைப்பதொன்று கண்டிலே னீயலாது வேறிலை
நினைப்புமாய் மறப்புமாய் நின்றமாய்கை மாய்கையை
அனைத்துமா யகண்டமா யநாதிமுன் னநாதியாய்
எனக்குள் நீயுனக்குள் நானிருக்குமாற தெங்ஙனே. 8
மண்ணும்நீ விண்ணும்நீ மறிகடல்க ளேழும்நீ
எண்ணும்நீ எழுத்தும்நீ யிசைந்தபண் ணெழுத்தும்நீ
கண்ணும்நீ மணியும்நீ கண்ணுளாடும் பாவைநீ
நண்ணுநீர்மை நின்றபாதம் நண்ணுமா றருளிடாய். 9
அரியுமல்ல வயனுமல்ல வப்புறத்தி லப்புறம்
கருமைசெம்மை வெண்மையை கடந்துநின்ற காரணம்
பெரியதல்ல சிறியதல்ல பற்றுமின்கள் பற்றுமின்கள்
துரியமுங் கடந்துநின்ற தூரதூர தூரமே. 10
ஆறிரண்டு நூறுதேவ ரன்றுரைத்த மந்திரம்
சுரியதோ ரெழுத்தையுன்னி சொல்லுவேன் சிவவாக்கியம்
தோஷதோஷ பாவமாய்கை தூரதூர வோடவோ. 1
கரியதோர் முகத்தையொத்த கற்பகத்தைக் கைதொழக்
கலைகள் நூல்கள் ஞானமுங் கருத்தில்வந்து திக்கவே
பெரியபேர்கள் சிறியபேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம்
பேயனாகி யோதிடும் பிழைபொறுக்க வேண்டுமே. 2
ஆனவஞ் செழுத்துளே யண்டமு மகண்டமு
ஆனவஞ் செழுத்துளே யாதியான மூவரும்
ஆனவஞ் செழுத்துளே யகாரமு மகாரமும்
ஆனவஞ் செழுத்துளே யடங்கலாவ லுற்றதே. 3
ஓடியோடி யோடியோடி யுட்கலந்த சோதியை
நாடிநாடி நாடிநாடி நாட்களுங் கழிந்துபோய்
வாடிவாடி வாடிவாடி மாண்டுபோன மாந்தர்காள்
கோடிகோடி கோடிகோடி எண்ணிறந்த கோடியே. 4
உருத்தரித்த நாடியி லொடுங்குகின்ற வாயுவை
கருத்தினா லிருத்தியே கபாலமேற்ற வல்லிரே
விருத்தரும் பாலராவர் மேனியுஞ் சிவந்திடும்
அருட்டரித்த நாதர்பாத மம்மைபாக முண்மையே. 5
வடிவுகண்டு கொண்டபெண்ணை மற்றொரு வனத்தினால்
விடுவனோவவனை யின்னம் வெட்டவேணு மென்பனே
நடுவன்வந் தழைத்தபோது நாறுமிந்த நல்லுடல்
சுடலைமட்டுங் கொண்டுபோய்த் தோட்டிகைக் கொடுப்பரே 6
என்னிலே யிருந்ததொன்றை யானறிந்த தில்லையே
என்னிலே யிருந்ததொன்றை யானறிந்து கொண்டபின்
என்னிலே யிருந்ததொன்றை யாவர்காண வல்லிரோ
என்னிலே யிருந்துணர்ந்து யானணுர்ந்து கொண்டனே. 7
நினைப்பதொன்று கண்டிலே னீயலாது வேறிலை
நினைப்புமாய் மறப்புமாய் நின்றமாய்கை மாய்கையை
அனைத்துமா யகண்டமா யநாதிமுன் னநாதியாய்
எனக்குள் நீயுனக்குள் நானிருக்குமாற தெங்ஙனே. 8
மண்ணும்நீ விண்ணும்நீ மறிகடல்க ளேழும்நீ
எண்ணும்நீ எழுத்தும்நீ யிசைந்தபண் ணெழுத்தும்நீ
கண்ணும்நீ மணியும்நீ கண்ணுளாடும் பாவைநீ
நண்ணுநீர்மை நின்றபாதம் நண்ணுமா றருளிடாய். 9
அரியுமல்ல வயனுமல்ல வப்புறத்தி லப்புறம்
கருமைசெம்மை வெண்மையை கடந்துநின்ற காரணம்
பெரியதல்ல சிறியதல்ல பற்றுமின்கள் பற்றுமின்கள்
துரியமுங் கடந்துநின்ற தூரதூர தூரமே. 10
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக