சிவயவசி

சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி
சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசிசிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி
சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசிசிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி
சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசிசிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி
சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி

திங்கள், ஜூன் 08, 2015

சிவவாக்கியர் பாடல்கள் - 1

அரியதோர் நமச்சிவாய மாதியந்த மானதும்
ஆறிரண்டு நூறுதேவ ரன்றுரைத்த மந்திரம்
சுரியதோ ரெழுத்தையுன்னி சொல்லுவேன் சிவவாக்கியம்
தோஷதோஷ பாவமாய்கை தூரதூர வோடவோ. 1

கரியதோர் முகத்தையொத்த கற்பகத்தைக் கைதொழக்
கலைகள் நூல்கள் ஞானமுங் கருத்தில்வந்து திக்கவே
பெரியபேர்கள் சிறியபேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம்
பேயனாகி யோதிடும் பிழைபொறுக்க வேண்டுமே. 2

ஆனவஞ் செழுத்துளே யண்டமு மகண்டமு
ஆனவஞ் செழுத்துளே யாதியான மூவரும்
ஆனவஞ் செழுத்துளே யகாரமு மகாரமும்
ஆனவஞ் செழுத்துளே யடங்கலாவ லுற்றதே. 3

ஓடியோடி யோடியோடி யுட்கலந்த சோதியை
நாடிநாடி நாடிநாடி நாட்களுங் கழிந்துபோய்
வாடிவாடி வாடிவாடி மாண்டுபோன மாந்தர்காள்
கோடிகோடி கோடிகோடி எண்ணிறந்த கோடியே. 4

உருத்தரித்த நாடியி லொடுங்குகின்ற வாயுவை
கருத்தினா லிருத்தியே கபாலமேற்ற வல்லிரே
விருத்தரும் பாலராவர் மேனியுஞ் சிவந்திடும்
அருட்டரித்த நாதர்பாத மம்மைபாக முண்மையே. 5

வடிவுகண்டு கொண்டபெண்ணை மற்றொரு வனத்தினால்
விடுவனோவவனை யின்னம் வெட்டவேணு மென்பனே
நடுவன்வந் தழைத்தபோது நாறுமிந்த நல்லுடல்
சுடலைமட்டுங் கொண்டுபோய்த் தோட்டிகைக் கொடுப்பரே 6

என்னிலே யிருந்ததொன்றை யானறிந்த தில்லையே
என்னிலே யிருந்ததொன்றை யானறிந்து கொண்டபின்
என்னிலே யிருந்ததொன்றை யாவர்காண வல்லிரோ
என்னிலே யிருந்துணர்ந்து யானணுர்ந்து கொண்டனே. 7

நினைப்பதொன்று கண்டிலே னீயலாது வேறிலை
நினைப்புமாய் மறப்புமாய் நின்றமாய்கை மாய்கையை
அனைத்துமா யகண்டமா யநாதிமுன் னநாதியாய்
எனக்குள் நீயுனக்குள் நானிருக்குமாற தெங்ஙனே.  8

மண்ணும்நீ விண்ணும்நீ மறிகடல்க ளேழும்நீ
எண்ணும்நீ எழுத்தும்நீ யிசைந்தபண் ணெழுத்தும்நீ
கண்ணும்நீ மணியும்நீ கண்ணுளாடும் பாவைநீ
நண்ணுநீர்மை நின்றபாதம் நண்ணுமா றருளிடாய். 9

அரியுமல்ல வயனுமல்ல வப்புறத்தி லப்புறம்
கருமைசெம்மை வெண்மையை கடந்துநின்ற காரணம்
பெரியதல்ல சிறியதல்ல பற்றுமின்கள் பற்றுமின்கள்
துரியமுங் கடந்துநின்ற தூரதூர தூரமே. 10

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக