அந்திமாலை யுச்சிமூன்று மாடுகின்ற தீர்த்தமும்
சந்திதர்ப் பணங்களுந் தபங்களும் செபங்களும்
சிந்தைமேவு ஞானமுந் தினஞ்செபிக்கு மந்திரம்
எந்தைராம ராமராம ராமவென்னு நாமமே. 11
கதாவுபஞ்ச பாதகங்க ளைத்துரந்த மந்திரம்
இதாமிதாம தல்லவென்று வைத்துழலு மேழைகள்
சதாவிடாம லோதுவார் தமக்குநல்ல மந்திரம்
இதாமிதாமி ராமராம ராமவென்னும் நாமமே. 12
நானதேது நீயதேது நடுவினின்ற தேதடா
கோணதேது குருவதேது கூறிடுங் குலாமரே
ஆனதேது வழிவதேது வப்புறத்தி லப்புறம்
ஈனதேது ராமராம ராமவென்ற நாமமே. 13
சாத்திரங்க ளோதுகின்ற சட்டநாத பட்டரே
வேத்திரைப்பு வந்தபோது வேதம்வந் துதவுமோ
மாத்திரைப்போ தும்முளே யறிந்துதொக்க வல்லிரேல்
சாத்திரப்பை நோய்களேது சத்திமுத்தி சித்தியே. 14
தூரந்தூரந் தூரமென்று சொல்லுவார்கள் சோம்பர்கள்
பாரும்விண்ணு மெங்குமாய் பரந்தஅப் பராபரம்
ஊருநாடு காடுமோடி யுழன்றுதேடு மூமைகாள்
நேரதாக வும்முளே யறிந்துணர்ந்து கொள்ளுமே. 15
நாலுவேத மோதுவீர் ஞானபாத மறிகிலீர்
பாலுள்நெய்க லந்தவாறு பாவிகா ளறிகிலீர்
ஆலமுண்ட கண்டனா ரகத்துளே யிருக்கவே
காலனென்று சொல்லுவீர் கனவிலும்மஃ தில்லையே. 16
வித்திலாத சம்ப்ரதாய மேலுமில்லை கீழுமில்லை
தச்சிலாது மாளிகை சமைந்தவாறு தெங்ஙனே
பெற்றதாயை விற்றடிமை கொள்ளுகின்ற பேதைகாள்
சித்திலாத போதுசிவ னில்லையில்லை யில்லையே. 17
அஞ்சுமூணு மெட்டதா யநாதியான மந்திரம்
நெஞ்சிலே நினைந்துகொண்டு நீருருச் செப்பிரேல்
பஞ்சமான பாதகங்க ணூறுகோடி செய்யினும்
பஞ்சுபோல் பறக்குமென்று நான்மறைகள் பன்னுமே. 18
அண்டவாச லாயிரம் ப்ரசண்டவாச லாயிரம்
ஆறிரண்டு நூறுகோடி யானவாச லாயிரம்
இந்தவாச லேழைவாச லேகபோக மானவாசல்
எம்பிரா னிருக்கும்வாச லியாவர்காண வல்லரே. 19
சாமம்நாலு வேதமும் சகலசாத் திரங்களும்
சேமமாக வோதினும் சிவனைநீ ரறிகிலீர்
காமநோயை விட்டுநீர் கருத்துளே யுணர்ந்தபின்
ஊனமற்ற காயமா யிருப்பனெங்க ளீசனே. 20
சந்திதர்ப் பணங்களுந் தபங்களும் செபங்களும்
சிந்தைமேவு ஞானமுந் தினஞ்செபிக்கு மந்திரம்
எந்தைராம ராமராம ராமவென்னு நாமமே. 11
கதாவுபஞ்ச பாதகங்க ளைத்துரந்த மந்திரம்
இதாமிதாம தல்லவென்று வைத்துழலு மேழைகள்
சதாவிடாம லோதுவார் தமக்குநல்ல மந்திரம்
இதாமிதாமி ராமராம ராமவென்னும் நாமமே. 12
நானதேது நீயதேது நடுவினின்ற தேதடா
கோணதேது குருவதேது கூறிடுங் குலாமரே
ஆனதேது வழிவதேது வப்புறத்தி லப்புறம்
ஈனதேது ராமராம ராமவென்ற நாமமே. 13
சாத்திரங்க ளோதுகின்ற சட்டநாத பட்டரே
வேத்திரைப்பு வந்தபோது வேதம்வந் துதவுமோ
மாத்திரைப்போ தும்முளே யறிந்துதொக்க வல்லிரேல்
சாத்திரப்பை நோய்களேது சத்திமுத்தி சித்தியே. 14
தூரந்தூரந் தூரமென்று சொல்லுவார்கள் சோம்பர்கள்
பாரும்விண்ணு மெங்குமாய் பரந்தஅப் பராபரம்
ஊருநாடு காடுமோடி யுழன்றுதேடு மூமைகாள்
நேரதாக வும்முளே யறிந்துணர்ந்து கொள்ளுமே. 15
நாலுவேத மோதுவீர் ஞானபாத மறிகிலீர்
பாலுள்நெய்க லந்தவாறு பாவிகா ளறிகிலீர்
ஆலமுண்ட கண்டனா ரகத்துளே யிருக்கவே
காலனென்று சொல்லுவீர் கனவிலும்மஃ தில்லையே. 16
வித்திலாத சம்ப்ரதாய மேலுமில்லை கீழுமில்லை
தச்சிலாது மாளிகை சமைந்தவாறு தெங்ஙனே
பெற்றதாயை விற்றடிமை கொள்ளுகின்ற பேதைகாள்
சித்திலாத போதுசிவ னில்லையில்லை யில்லையே. 17
அஞ்சுமூணு மெட்டதா யநாதியான மந்திரம்
நெஞ்சிலே நினைந்துகொண்டு நீருருச் செப்பிரேல்
பஞ்சமான பாதகங்க ணூறுகோடி செய்யினும்
பஞ்சுபோல் பறக்குமென்று நான்மறைகள் பன்னுமே. 18
அண்டவாச லாயிரம் ப்ரசண்டவாச லாயிரம்
ஆறிரண்டு நூறுகோடி யானவாச லாயிரம்
இந்தவாச லேழைவாச லேகபோக மானவாசல்
எம்பிரா னிருக்கும்வாச லியாவர்காண வல்லரே. 19
சாமம்நாலு வேதமும் சகலசாத் திரங்களும்
சேமமாக வோதினும் சிவனைநீ ரறிகிலீர்
காமநோயை விட்டுநீர் கருத்துளே யுணர்ந்தபின்
ஊனமற்ற காயமா யிருப்பனெங்க ளீசனே. 20
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக