சிவயவசி

சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி
சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசிசிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி
சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசிசிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி
சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசிசிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி
சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி

வெள்ளி, ஜூன் 12, 2015

பட்டினத்தார் பாடல்கள் - 1

திருப்பாடல் திரட்டு

முதலாவது கோவில் திருவகவல்

திருச்சிற்றம்பலம்

நிலைமண்டில ஆசிரியப்பா

நினைமின் மனனே நினைமின் மனனே
சிவபெரு மானைச் செம்பொனம் பலவனை
நினைமின் மனனே நினைமின் மனனே
அலகைத் தேரின் அலமரு காலின்
உலகப்பொய் வாழ்க்கையை யுடலையோம் பற்க 5

பிறந்தன இறக்கும் இறந்தன பிறக்கும்
தோன்றின மறையும் மறைந்தன தோன்றும்
பெருத்தன சிறுக்கும் சிறுத்தன பெருக்கும்
உணர்ந்தன மறக்கும் மறந்தன வுணரும்
புணர்ந்தன பிரியும் பிரிந்தன புணரும் 10

அருந்தின மலமாம் புனைந்தன அழுக்காம்
உவப்பன வெறுப்பாம் வெறுப்பன வுவப்பாம்
என்றிவை யனைத்தும் உணர்ந்தனை யன்றியும்
பிறந்தன பிறந்தன பிறவிக டோறும்
கொன்றனை யனைத்தும் அனைத்துநினைக் கொன்றன 15

தின்றனை யனைத்தும் அனைத்துநினைத் தின்றன
பெற்றனை யனைத்தும் அனைத்துநினைப் பெற்றன
ஓம்பினை யனைத்தும் அனைத்துநினை யோம்பின
செல்வத்துக் களித்தனை தரித்திரத் தழுங்கினை
சுவர்க்கத் திருத்தனை நரகிற் கிடந்தனை 20

இன்பமுந் துன்பமும் இருநிலத் தருந்தினை
ஒன்றொன் றொழியா துற்றனை அன்றியும்
புற்புதக் குரம்பை துச்சி லொதுக்கிடம்
என்னநின் றியங்கும் இருவினைக் கூட்டைக்
கல்லினும் வலிதாக் கருதினை இதனுள் 25

பிளையும் நீரும் புறப்படும் ஒருபொறி
மீளுங் குறும்பி வெளிப்படும் ஒருபொறி
சளியும் நீரும் தவழும் ஒருபொறி
உமிழ்நீர் கோழை ஒழுகும் ஒருபொறி
வளியும் மலமும் வழங்கும் ஒருவழி 30

சலமும் சீயுஞ் சரியும் ஒருவழி
உள்ளூறத் தொடங்கி வெளிப்பட நாறுஞ்
சட்டகம் முடிவிற் சுட்டெலும் பாகும்
உடலுறு வாழ்க்கையை உள்ளூறத் தேர்ந்து
கடிமலர்க் கொன்றைச் சடைமுடிக் கடவுளை 35

ஒழிவருஞ் சிவபெரும் போக வின்பத்தை
நிழலெனக் கடவா நீர்மையொடு பொருந்தி
எனதற நினைவற இருவினை மலமற
வரவொடு செலவற மருளற இருளற
இரவொடு பகலற இகபரம் அறவொரு 40

முதல்வனைத் தில்லையுள் முளைத்தெழுஞ் சோதியை
அம்பலத் தரசனை ஆனந்தக் கூத்தனை
நெருப்பினி லரக்கென நெக்குநெக் குறுகித்
திருச்சிற் றம்பலத் தொளிருஞ் சீவனை
நினைமின் மனனே நினைமின் மனனே 45

சிவபெரு மானைச் செம்பொனம் பலவனை
நினைமின் மனனே நினைமின் மனனே.

திருச்சிற்றம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக