சிவயவசி

சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி
சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசிசிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி
சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசிசிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி
சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசிசிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி
சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி

வியாழன், ஜூன் 11, 2015

சிவவாக்கியர் பாடல்கள் - 3

சங்கிரண்டு தாரையொன்று சன்னபின்ன லாகையால்
மங்கிமாளு தேயுலகில் மானிடங்க ளெத்தனை
சங்கிரண்டை யுந்தவிர்ந்து தாரையூத வல்லிரேல்
கொங்கைமங்கை பங்கரோடு கூடிவாழ லாகுமே. 21

தங்கமொன்று ரூபம்வேறு தன்மையான வாறுபோல்
செங்கண்மாலு மீசனுஞ் சிறந்திருந்த தெம்முளே
விங்களங்கள் பேசுவார் விளங்குகின்ற மாந்தரே
எங்குமாகி நின்றநாமம் நாமமிந்த நாமமே. 22

அஞ்செழுத்தி லேபிறந்து அஞ்செழுத்தி லேவளர்ந்து
அஞ்செலுத்தை யோதுகின்ற பஞ்சபூத பாவிகாள்
அஞ்செழுத்தி லோரெழுத் தறிந்துகூற வல்லிரேல்
அஞ்சலஞ்ச லென்றுநாத னம்பலத்தி லாடுமே. 23

அஞ்சுமஞ்சு மஞ்சுமே யனாதியான தஞ்சுமே
பிஞ்சுபிஞ்ச தல்லவோ பித்தர்காள் பிதற்றுவீர்
நெஞ்சிலஞ்சு கொண்டுநீர் நின்றுதொக்க வல்லிரேல்
அஞ்சுமில்லை யாருமில் லனாதியாகத் தோன்றுமே. 24

நீளவீடு கட்டுறீர் நெடுங்கதவு சாத்துவீர்
வாழவேணு மென்றல்லோ மகிழ்ந்திருந்த மாந்தரே
காலனோலை வந்தபோது கைகலந்து நின்றிடும்
ஆலமுண்ட கண்டர்பாத மம்மைபாத முண்மையே. 25

வீடெடுத்து வேள்விசெய்து மெய்யரோடு பொய்யுமாய்
மாடுமக்கள் பெண்டிர்சுற்ற மென்றிருக்கு மாந்தர்காள்
நாடுபெற்ற நடுவர்கையி லோலைவந் தழைத்திடில்
ஓடுபெற்ற தவ்விலை பெறாதுகாணு முடலமே. 26

ஓடமுள்ள போதெலா மோடியே யுலாவலாம்
ஓடமுள்ள போதெலா முறுதிபண்ணிக் கொள்ளலாம்
ஓடமு முடைந்தபோது வொப்பிலாத நாளிலே
ஆடுமில்லை கோலுமில்லை யாருமில்லை யானதே. 27

அண்ணலே யனாதியே யனாதிமுன் னனாதியே
பெண்ணுமாணு மொன்றலோ பிறப்பதற்கு முன்னெலாம்
கண்ணிலாணின் சுக்கிலங் கருவிலோங்கு நாளிலே
மண்ணுளோரும் விண்ணுளோரும் வந்தவாற தெங்ஙனே. 28

பண்டுநான் பறித்தெறிந்த பன்மலர்க ளெத்தனை
பாழிலே செபித்துவிட்ட மந்திரங்க ளெத்தனை
மிண்டனாய்த் திரிந்தபோ திறைத்தநீர்க ளெத்தனை
மீளவுஞ் சிவாலயங்கள் சூழவந்த தெத்தனை. 29

அண்டர்கோ னிருப்பிட மறிந்துணர்ந்த ஞானிகாள்
பண்டறிந்த பான்மைதன்னை யாரறிய வல்லரே
விண்டவேதப் பொருளையன்றி வேறுகூற வகையிலா
கண்டகோயில் தெய்வமென்று கையெடுப்ப தில்லையே. 30

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக